Skip to main content

எல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சிறையில் இருக்கும் சசிகலா ஒருவித திட்டம் போட்டு வருவதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன. சிறையில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம் மௌனம் சாதிக்கும் சசிகலா, சில முக்கிய சொந்த பந்தங்களிடம் மட்டும் தன் எதிர்கால வியூகங்கள் பற்றி உற்சாகமாகப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி நம்மிடம் மனம் திறந்து பேசிய மன்னார்குடித் தரப்பு, டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகிடுவோம் என்று சசிகலா அழுத்தமாக நம்புவதாக தெரிவிக்கின்றனர். அவர் விடுதலைக்கு கர்நாடகாவில் இருக்கும் எடியூரப்பா அரசும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். அதனால் தனக்கு எதிராக அங்கே சிறை அதிகாரி ரூபா கிளப்பிய புகாரும் அது தொடர்பாக நடக்கும் விசாரணையும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. 

 

admk



சிறையில் இருந்து வெளியே வந்ததும், அ.தி.மு.க.வி.லோ, அ.ம.மு.க.விலோ உடனடியாக  சேர்ந்து செயல்படாமல், தனித்து இயங்குவதற்காக புதுப்புது திட்டங்களை அவர் மனதிற்குள் போட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அதனால், எல்லோரும் என்னிடம் வரும் காலம் வரப்போகுது என்று சசிகலா மிகவும் நம்பிக்கையாக உள்ளார் என்று கூறுகின்றனர். இந்த தகவல் எடப்பாடிக்கும் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சசிகலா வெளியில் வந்தால், பெரும்பாலான மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பயம் எடப்பாடிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சின்னம்மா தியாகம் செய்துவிட்டுத்தான் சிறைக்கு சென்றுள்ளார். அவர் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி வந்து, கட்சியை வழிநடத்துவார் என்று அதிரடி கிளப்பியுள்ளார். உடனே அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் காலத்திலும் சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். 


இதனையடுத்து அமைச்சர்கள், சசிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு அணியாக நின்று சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதை எல்லாம் நினைத்து வருத்தத்தில் இருக்கும் எடப்பாடி, சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓ.பி.எஸ். சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். அண்மைக் காலமாக ஓ.பி.எஸ் உடன் நெருக்கமாகக் கைகோத்திருக்கும் எடப்பாடி, தங்களின் பொது எதிரியாக சசிகலாவையும், அமைச்சர் வேலுமணியையும் கருதுவதாக கூறுகின்றனர். சசிகலாவைப் போலவே வேலுமணி, ஆட்சியைத் தந்திரமாகக் கைப்பற்ற முயற்சிப்பதாக எடப்பாடி நினைக்கிறார். அதற்கு காரணம், வேலுமணிக்கு தைரியம் கொடுத்துவரும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தான் என்றும் கூறுகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.