Skip to main content

ஆலங்காயம் திமுக சேர்மன் பதவி பரபரப்பு! சாலைகளை அடைத்துள்ள காவல்துறை! 

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Alangayam DMK chairman post campaign! Police block roads!

 

தமிழ்நாட்டில் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு, மாவட்டக்குழு கவுன்சிலர்கள் ஆகியோர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தலைவருக்கான மறைமுகத்தேர்தல் மூலம் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு தலைவர் தேர்வும், மதியம் 2 மணிக்கு துணைத்தலைவர் தேர்வும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள பெருந்திட்ட வளாகத்திலும், ஒன்றியக்குழு அலுவலகத்திலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் 11 கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகள் திமுகவுக்கு சுலபமாக கிடைக்கும். இந்நிலையில், சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் காயத்ரி பிரபாகரன், சங்கீதா பாரி என இருதரப்பு மோதுகிறது. கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டு திரும்பியபோது இருதரப்பும் கவுன்சிலர்களை கடத்த மோதிக்கொண்டனர். இது திருப்பத்தூர் மாவட்டத்தையும் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பைச் சேர்ந்த கவுன்சிலர்களின் குடும்பத்தார் மாறிமாறி புகார் தந்துள்ளனர்.

 

இந்நிலையில், அக்டோபர் 21ஆம் தேதி ஆலங்காயம் ஒ.செவும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான சம்பத்குமார், ‘திமுகவினர் ஆலங்காயம் தேர்தலில் அதிமுகவினர் வாக்களிக்கவிடாமல் செய்வதற்காக 200 பேரைக் களமிறக்கியுள்ளனர். இதனால் எங்கள் கவுன்சிலர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்படவும், உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுகிறது. எங்கள் கவுன்சிலர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தந்துள்ளார். இதனால் ஆலங்காயம் பரபரப்பாகியுள்ளது.

 

Alangayam DMK chairman post campaign! Police block roads!

 

அதனைத் தொடர்ந்து காவல்துறை, ஆலங்காயம் வரும் அத்தனை சாலைகளையும் அடைத்து சீல் வைத்துள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 1 கி.மீ வெளியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு மக்கள் இறங்கி நடந்து செல்ல வைக்கப்படுகிறார்கள். இதனால் ஆலங்காயம் நகரமும், ஒன்றியக்குழு அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கிறது.

 

கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது நடந்ததுபோல் மோதல் நடந்துவிடக் கூடாது என 100க்கும் அதிகமான காவலர்களைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமாகச் செய்துள்ளது காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.