Skip to main content

''எங்களுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

 AIADMK loses power because it did not form an alliance with us - Premalatha Vijayakand interview!

 

எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இன்றைக்கும் விஜயகாந்தை தெய்வமாக, தலைவராக நினைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் யாரோ ஒருவர் கட்சியைவிட்டு போவதால் கட்சிக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. ஒருவர் போனால் அந்த இடத்திற்கு பத்து பேர் வந்துகொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுடைய ஆலோசனையே கட்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு போவதைப் பற்றித்தான். பெரிய அளவில் கூட்டம் கூடக்கூடாது என தடுத்ததால்தான் காலதாமதமாக இந்த கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இனிய ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெறும். அந்த வகையில் இந்த வருஷம் இன்னும் ஒரு மாத காலத்தில் நடத்தி தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப இருக்கிறோம்.

 

விஜயகாந்த் நல்லா இருக்காரு நேற்று கூட ஜெனரல் செக்கப்பிற்காக அழைத்துச் சென்றோம். இப்போ சிறந்த முறையில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். எல்லா நிர்வாகிகளும் ஆலோசனையில் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறோம். இங்கு எல்லா பதவிகளையும் தீர்மானிப்பது விஜயகாந்த் தான்.  யாருக்கு எந்தப் பதவி, எப்போது கொடுக்கவேண்டும் என அவருக்குத் தெரியும். அவர் அறிவிப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு. இன்று அவர்கள் ஆட்சி இழந்திருக்கிறார்கள். ஏன் என்றால் ஆறு மாதத்திற்கு முன்னாடியே தேமுதிகவிலிருந்து பேசினோம். இப்போது இருந்தே கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி என்று பேசலாம் என சொன்னோம். ஆனால் அவர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள். அதன் விளைவு ஆட்சியை இழந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை. இப்போது அதை அவர்கள் உணர்கிறார்கள்.

தேமுதிகவை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு முன்பே எல்லாருமே எங்களிடம் பேசும்போது அதற்கான ஆலோசனையைக் கொடுத்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நாங்கள் பேசுவோம்...பேசுவோம்... என காலம் தாழ்த்தி கடைசியில் முடிவெடுக்க முடியாமல் ஏற்பட்ட பிரச்சனைதான் இப்போது ஆட்சியை இழந்திருக்கிறார்கள். சரியான நேரத்தில் நாங்கள் சொன்ன முடிவை எடுத்திருந்தால் இன்று ஆட்சி அதிமுக கைப்பற்றியிருக்கும். தேமுதிகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். இழந்தது அவர்கள்தான்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.