Skip to main content

அதிமுக பெண் கவுன்சிலர்கள் கடத்தல்? - 'தண்ணீ ' காட்டிய திமுக

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

AIADMK abducts female councilors?

 

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு பெண் கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக அதிமுக பிரமுகர் புகார் கொடுக்க, யாரும் கடத்தவில்லை எனப் பெண் கவுன்சிலர்கள் வாக்குமூலம் அளிக்க, சேலம் அரசியல் களத்தில் பரபரப்பும் சர்ச்சையும் ஒருசேர ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். மொத்தம் 13 கவுன்சிலர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில் திமுக தரப்பில் 5, அதிமுக தரப்பில் 6, பாமக 1, இ.கம்யூ., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், தலைவர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்ட திமுக, தங்கள் தரப்புக்கு ஆதரவாக கவுன்சிலர்களை இழுக்கும் வேலைகளைச் செய்தது. அதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

 

fafaf
          சுரேஷ்குமார்

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் திமுக பொறுப்பாளரான பாரப்பட்டி சுரேஷ்குமாரை எப்படியும், அந்த ஒன்றியக்குழுவின் தலைவராக ஆக்கிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் கட்சியினர் ஜெகநாதனுக்கு எதிராக ஆதரவு திரட்டும் வேலைகளைக் கடந்த மூன்று மாதங்களாகச் செய்து வந்தனர். ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில், அதை எதிர்த்து ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜன. 21) நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. பந்து தனது கையைவிட்டு நழுவிச் சென்றதை உணர்ந்து கொண்ட ஜெகநாதன், தனது கட்சியைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா ஆகியோரை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தார். 

 

ஏனெனில், திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு ஆதரவாக இவர்கள்தான் செயல்பட்டனர் என்பதை அறிந்திருந்தார் ஜெகநாதன். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் கவுன்சிலர்கள் மாயமானதை அறிந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு, குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை மடக்கினர். 20க்கும் மேற்பட்ட கும்பல் ஜெகநாதன் காரை மறித்து, பெண் கவுன்சிலர்கள் இருவரையும் தங்களது காரில் ஏற்றிச்சென்றனர். தனக்கு எதிரான வாக்கெடுப்பு கூட்டத்தை முறியடித்துவிடும் நோக்கத்தில் மனக்கணக்குப் போட்டு வைத்திருந்த ஜெகநாதன், இந்தச் சம்பவத்தால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் தன் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாகப் புகார் அளித்தார்.  

 

AIADMK abducts female councilors?
         ஜெகநாதன்

 

இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், ''நான் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் அதிமுக செயலாளராகவும், ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறேன். என் மீது ஜன. 21ம் தேதியன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வாக்கெடுப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த  (அதிமுக) கவுன்சிலர்கள் 5 பேரை அழைத்துக் கொண்டு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் எனக்கருதி, கார்களில் சென்று கொண்டிருந்தோம். ஒரு காரில் நானும், பெண் கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி உள்ளிட்ட நான்கு பேரும் இருந்தோம். மற்றொரு காரில் இன்னும் இரண்டு கவுன்சிலர்கள் இருந்தனர். குமாரபாளையம் அருகே கத்தேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கார்களில் வந்து எங்களை வழிமறித்தனர்.  

 

அந்தக் கும்பல் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை தலை முடியைப் பிடித்து இழுத்துச்சென்று அவர்கள் காரில் கடத்திச்சென்று விட்டனர். என்னை கீழே இறங்க விடாமல் கார் கதவை மூடிவிட்டனர். பிளேடு வைத்துக்கொண்டு மிரட்டினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் ஜெகநாதன்.

 

asfaf
          ஜெயசங்கரன்

 

இது ஒருபுறம் இருக்க, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், சுந்தரராஜன், நல்லதம்பி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக செயலாளர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக எம்எல்ஏ ஜெயசங்கரன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடத்தல் கும்பல் தாக்கியதில் பெண் கவுன்சிலர்களுக்கு கழுத்திலும், கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

 

திமுகவிற்கு தேர்தலில் ஜெயிக்க திராணி இல்லை. கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் அரசுப் பணியில் உள்ளனர். அதை வைத்து திமுகவினர் மிரட்டி, கடத்திச்சென்று விட்டனர். இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.  

 

safdasfd
               பூங்கொடி, சங்கீதா

 

இந்தப் பரபரப்புக்கு இடையே, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அதிமுக பெண் கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நிவேதா உள்பட 10 பேர் ஜெகநாதனுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை ஜெகநாதன் இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் கூறுகையில், “எங்களை யாரும் கடத்திச்செல்லவில்லை. நாங்களாக சுய விருப்பத்தின்பேரில்தான் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தோம்” என்று மட்டும் சுருக்கமாகக் கூறினர். அரசியல் சதுரங்கத்தில் அதிமுக ஒரு கணக்குப்போட, அதை திமுகவினர் முறியடித்து வெற்றி பெற்றுள்ளனர். இச்சம்பவம், சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.