Skip to main content

"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு! 

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

அண்மையில் மதுரை ரயில்வே கோட்டப் பணியில், பொறியியல் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 189 பேரில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகித பேரும், வட மாநிலத்தவர் 70 சதவிகித பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்பு இரண்டாம் கட்ட பணியான தண்டவாள பராமரிப்பு பணியில் அமர்த்தப்பட்ட 262 பேரில், 223 பேர் வடமாநிலத்தவரும், 39 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். மற்ற இதர பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 89 பேரில், 84 பேர் வடமாநிலத்தவரும், 5 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் ரயில்வே தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக இளைஞர்களின் திறமையின்மை தான் காரணம் என்று அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

admk



மேலும் பல தகுதி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் வெற்றி விகிதம் என்பது குறைவாக உள்ளது வருத்தமளிக்கிறது என்றும் பேசியுள்ளார்.இதனால் நம்மளுடைய தேர்ச்சி விகிதத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார். வடமாநிலத்தவரை தமிழகத்தில் அதிகம் பேரை நியமிப்பதன் மூலம் இந்தி திணிப்பு நடைபெறுவதாக எதிர்க் ட்சித் தலைவர் ஸ்டாலினும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து வடமாநிலத்தவரை நியமிப்பதால் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்பு குறைகிறது என்று எதிர்கட்சியினரும், மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அதிமுக அமைச்சரின் கருத்துக்கு இளைஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.