Skip to main content

“எந்த வேஷம் போட்டாலும் தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்..” - சசிகலா குறித்து சி.வி. சண்முகம்

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

ADMK CV Shanmugam comment about sasikala in admk

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று (17.10.2021) விழுப்புரத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய சி.வி. சண்முகம், “அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கமாக எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. அவர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அளப்பரிய தியாகத்தால் தற்போதுவரை மக்களின் சக்தியைப் பெற்றுள்ள கட்சி அதிமுக. 

 

இந்த இயக்கம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியல் வரலாற்றில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அதேபோல் கடந்த 1996ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. ஆனால், மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது கட்சிக்கும் மறைந்த ஜெயலலிதாவுக்கும், இயக்கத்தில் உள்ள நமது தொண்டர்களுக்கும் சேரும். இந்த தோல்வி நிரந்தரம் இல்லை. 

 

இந்த இயக்கம் பல எதிரிகளை, துரோகிகளை சந்தித்துள்ளது. அவர்களை வீழ்த்திவிட்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு துணையாக இருந்த நாஞ்சில் ராஜேந்திரன், எஸ்.டி. சோமசுந்தரம், ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன்... இப்படி மக்களால் போற்றப்பட்டவர்களே கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றனர். ஆனால், அப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தனர். இவர்களைவிட இன்று சில துரோகிகள் அதிமுகவே நாங்கள்தான் என கூறுகின்றனர். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்; தொண்டர்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள். எத்தனை சசிகலா வந்தாலும் இந்த மாபெரும் அதிமுக என்ற இயக்கத்தை துளிகூட அசைத்துப் பார்க்க முடியாது. 

 

சசிகலாவால் தோற்றுவிக்கப்பட்ட அமமுகவையே இவர்களால் நிலைநிறுத்த முடியவில்லை. இந்த நிலையில், அதிமுகவைக் காப்பாற்றப் போவதாகக் கூறிவருகிறார்கள். நீங்கள் என்ன வேஷம் போட்டாலும் அதிமுக தொண்டர்கள் இனிமேல் அதிமுக தொண்டர்கள்தான். உங்களிடம் ஏமாற மாட்டார்கள். அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. எனவே, இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். எதிரிகள், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். மறைந்த ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் வகையில் அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்களும் கட்சி முன்னோடிகளும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்” என ஆவேசமாகப் பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.