Skip to main content

இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக; ஆர்.எஸ். பாரதி பகிரங்க சவால்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
ADMK boycotts by elections RS Bharti Public Challenge

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆன் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர். 

ADMK boycotts by elections RS Bharti Public Challenge

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவை குறை கூறுகிறது. ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன். விக்ரவாண்டி இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் தான் அதிமுக போட்டியிடவில்லை. 

ADMK boycotts by elections RS Bharti Public Challenge

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். 1992 இல்  பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது 2000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 2300 வாக்குகள் வரை அதிமுக போட்டது. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்துகளில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுகவினர் போட்டனர். இந்த இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான். இந்தத் தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூற முடியுமா?.

எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வாக்களிக்க மாட்டார்களா?. வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். எனவே வன்னியர் மக்களே கலைஞர் செய்த நன்மையே திமுகவிற்கு வெற்றியைத் தேடித் தரும்”எனத் தெரிவித்தார். இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

உள் ஒதுக்கீடு; விவாதிக்க அமைச்சர் தயாரா? - அன்புமணி சவால் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Anbumani challenges minister sivasankar to discuss reservation

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸடாலின், “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்” என்று பதிலளித்தார். 

இதனைத் தொடர்ந்து ஜி.கே.மணியின் கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர், “முன்னாள் முதல்வர் கலைஞர்தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். ஆனால் அவரை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போன்று சித்தரிக்கும் வேலையை பாமக தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள். 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் தற்போது கைகோர்த்துள்ளீர்கள் என பதிலடி கொடுத்தார். நீண்ட நேரம் தொடர்ந்து அவரின் உறையில் பாமக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  

இந்த நிலையில் இன்று செதியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக விவாதத்திற்கும்  அழைப்பு விடுத்துள்ளார்.  அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.  தேதி,  இடம்,  நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்.

திண்டிவனத்திலிருந்து ராமதாஸ் குரல் ஒலிப்பதாக  அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார்.  அந்த குரல் மட்டும்  ஒலிக்க வில்லை என்றால் சிவசங்கர்,  அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது.  இது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதால் மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இது வன்னியர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல; தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனை. தற்போது கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் முறையாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் பட்டியலின மக்களுக்கு தற்போது வழங்கும் 18 சதவீதத்துக்கு பதிலாக 22 சதவீதம் கிடைக்கும்.  தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீகாரில் சாதி வாரி  கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.  அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்து இருக்கிறார்கள். 

இது புரியாமல் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தமிழக முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் எந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்  ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது?  எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தாமல் எம்பிசிக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க முடியுமானால் வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி  கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மேலும், “கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுகிறது என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு எம்எல்ஏவின் தம்பி தான் இதை முழுவதுமாக கவனித்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தும் எங்கள் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.  இது வேடிக்கையாக உள்ளது. எங்களிடம் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார். 

Next Story

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Resign the post and let politics talk  E.P.S. Emphasis

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும். 

Resign the post and let politics talk  E.P.S. Emphasis

கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார்.