Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு; அண்ணாமலை மழுப்பல் பதில்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

AIADMK-BJP Alliance Breakdown Annamalai is the elusive answer
கோப்புப்படம்

 

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்ததுடன் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

 

பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, “நான் இது குறித்து பிறகு பேசுகிறேன். யாத்திரையின் போது அரசியல் பேசமாட்டேன்” எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கோயில் அருகே மனித மண்டை ஓடுகள்! மாந்திரீக பூஜையா? 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Coimbatore ramanathapuram issue

 

கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகே நேற்று மனித மண்டை ஓடு இரண்டும், சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

 

கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், அந்தக் கோயில் அருகே மனித மண்டை ஓடு போல் தென்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். பிறகு சந்தேகத்துடன் அருகே சென்று பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு இரு மனித மண்டை ஓடுகள் வெட்ட வெளியில் வீசப்பட்டுள்ளன. மேலும், அதன் அருகே சில எலும்புகள் ஒரு கவரில் கட்டி வீசப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து அங்கு அதிகளவில் மக்கள் குவியத் துவங்கினர். 

 

அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடனடியாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, அங்கிருந்த மனித மண்டை ஓடுகளையும், கவரில் இருந்த எலும்புகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எலும்புகளும், மண்டை ஓடுகளும் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு மண்டை ஓடு சரியாக பாதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தும் முறை. அதனால், இது மருத்துவ பயிற்சிக்கு உபயோகப்படுத்திய மண்டை ஓடுகளாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

 

ஆனால், அப்படி பயன்படுத்தும் எலும்புகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது போல், பொதுவெளியில் வீசிவிட்டு செல்ல முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும். 

 

மனித மண்டை ஓடு கோயிலுக்கு அருகே கிடைத்துள்ளதால், இது மாந்திரீகத்திற்கு உபயோகிக்கப்பட்டதா எனும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட மண்டை ஓடுகளா எனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் கோயில் அருகே இரு மனித மண்டை ஓடுகளும், சில எலும்புகளும் பொதுவெளியில் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்