Skip to main content

அண்ணாமலையிடம் நியாயம் கேட்க இருக்கும் 5000 தொண்டர்கள்; பாஜகவில் சலசலப்பு 

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

5000 volunteers to seek justice from Annamalai; Uproar in BJP

 

பிரபா கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஒன்றிய பாஜகவின் இளைஞர் அணித் தலைவராக உள்ளார். சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் பிரபா கார்த்திகேயன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பாஜகவின் நிர்வாக அளவில் வழங்கப்படும் பதவிக்காக பிரபா கார்த்திகேயன் மகேந்திரனிடம் பேரம் பேசுகிறார். அதில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன் பெயரும் பேசப்பட்டது.

 

இந்த உரையாடல் இணையத்தில் அதிகமாக பரவியது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

தொடர்ந்து வெளியான மற்றொரு அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..” என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவராக இருந்த கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேன் கூட்டை கலைப்பது போல் கலைத்துள்ளார்கள். அண்ணாமலை கர்நாடக தேர்தல் காரணமாக அங்கு இருப்பதால், அவரை சந்தித்த பின் கமலாலயத்திற்கு சென்று நியாயம் கேட்க தேதி கேட்டுள்ளோம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிட்டத்தட்ட 50 வண்டிகள் எடுக்க இருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக்கொண்டு சென்று, என்ன நடந்தது, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் அங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் தலைவரிடம் கேட்டுக்கொண்டு நல்ல முடிவு எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.