Skip to main content

3 கி.மீ படகு பயணம்... பழங்குடியினர் உணவை விரும்பி சாப்பிட்ட கனிமொழி.. (படங்கள்)

Published on 21/01/2021 | Edited on 21/01/2021


‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சாரப் பயணத்துக்காக குமரி மாவட்டத்தில் 3 நாட்களாக பலதரபட்ட மக்களைச் சந்தித்து வந்த கனிமொழி எம்.பி., நேற்று (20 ஜன.) மீனவர்கள், ரப்பர் தொழிலாளர்கள், முந்திரி ஆலை தொழிலாளர்கள், 100 நாள் பணியாளர்கள் மற்றும் குடும்ப பெண்கள் ஆகியோர் பங்கெடுத்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

 

பின்னர் மாலையில் பேச்சிப்பாறை அருகேயுள்ள தச்சமலையில், பழங்குடியின மக்கள் பங்கெடுத்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் கனிமொழி. இதற்காக பேச்சிப்பாறை அணையில் படகு மூலம் 3 கி.மீ. தூரம் பயணம் செய்து தச்சமலைக்குச் சென்றார். அவருக்குப் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி கும்ப மரியாதை வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அங்கு நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

அப்போது பேசிய சௌந்தர், “நான் பொருளாதரம் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். என்னைப் போல் இன்னும் பலர் பட்டப்படிப்பு எல்லாம் படித்து இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு சதவிதம் இடஒதுக்கீடு மட்டும் இருப்பதால், அரசு வேலை எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக இங்கு அரசு ஆரம்பப் பள்ளியும் அங்கன்வாடி மையமும் இருக்கிறது. அதில் பணிபுரிபவர்கள் 30 அல்லது 40 கி.மீ. தூரத்தில் டவுனில் வசிப்பவர்கள்தான் பேச்சிப்பாறை அணையைக் கடந்து வந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியை, படித்த எங்களுக்கு வரும் தி.மு.க. ஆட்சியில் வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

ராஜன் என்பவர், “வனத்தைப் பாதுகாக்க எங்களைத் தவிர வேறு யாருக்கும் உணர்வுபூர்வமான எண்ணங்கள் இருக்காது. அவர்கள் அதை அரசு வேலையாகத்தான் நினைப்பார்கள். ஆனால், நாங்களோ வனத்தை எங்கள் வீடாக நினைத்து வாழ்கிறோம். இதனால் அரசு, வனத்துறையில் எங்களுக்கு வேலை வழங்க தி.மு.க. நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த 2009-ல் தான் எங்களுக்கு மின்சாரமே கிடைத்தது. மின்சாரம் கிடைத்த நாளை பொங்கலிட்டு நாங்கள் கொண்டாடினோம். இங்கிருக்கும் பள்ளிக்கூடமும் அங்கன்வாடி மையமும் தி.மு.க. ஆட்சியில்தான் வந்தது. அதுபோல் அரசியல் கட்சியில் எங்களை நேரிடையாக சந்திக்கும் முதல் தலைவரும் நீங்கள்தான் என பாராட்டினார்கள்.


தொடா்ந்து பேசிய கனிமொழி, “தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உங்கள் குறைகளை நிறைவேற்றித் தருவார். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்றார். அதன்பிறகு காட்டில் விளைந்த 11 கிழங்கு வகைகளைச் சமைத்து கனிமொழிக்கு பரிமாறினார்கள். அதை அவர் ருசியோடு விரும்பி உண்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.