Skip to main content

2021 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி விவரங்கள்!

Published on 16/03/2021 | Edited on 03/04/2021

 

2021 TamilNadu assembly election full detail

 

தமிழகத்திற்கான 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது. தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் மீது மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை நடைபெறுவதோடு, வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே. 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.  

 

இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. யார் தலைமையில் கூட்டணி. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன எனும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. 

 

திமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 

 

2021 TamilNadu assembly election full detail

 

திமுக  173
காங்கிரஸ் 25 
சி.பி.ஐ 6
சி.பி.எம். 6
விசிக 6
மதிமுக 6
கொ.ம.தே.க. 3
இ.யூ.மு.லீக். 3
ம.ம.க 2
ஃபார்வார்ட் பிளாக் 1 
தமிழக வாழ்வு உரிமை 1 
மக்கள் விடுதலை கட்சி 1 
ஆதித்தமிழர் பேரவை  1


அதிமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி

 

2021 TamilNadu assembly election full detail


அதிமுக  179
பாட்டாளி மக்கள் கட்சி 23 
பாரதிய ஜனதா கட்சி 20
தமிழ் மாநில காங்கிரசு 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1
புரட்சி பாரதம் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
பசும்பொன் தேசிய கழகம் 1


மநீம தலைமை: முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

 

2021 TamilNadu assembly election full detail

 

மநீம 144
ஐ.ஜே.க 40
சமக 37
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10
தமிழ்நாடு இளைஞர் கட்சி 3


அமமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்

 

2021 TamilNadu assembly election full detail

 

அமமுக 161
தேமுதிக 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3
கோகுல மக்கள் கட்சி 1 
மருது சேனை சங்கம் 1 
விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1 
மக்கள் அரசு கட்சி 1 
 

நாம் தமிழர்: முதல்வர் வேட்பாளர் சீமான்

 

2021 TamilNadu assembly election full detail

 

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

 

 

திமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்   

 

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

 

சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர்கள் பட்டியல்!

 

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பட்டியல்

 

விசிக வேட்பாளர் பட்டியல் 

 

திமுக கூட்டணியில் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்

 

பாமக வேட்பாளர்கள் பட்டியல்


 பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

 

த.மா.கா. மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

 


அமமுக வேட்பாளர் பட்டியல் 


தேமுதிக வேட்பாளர் பட்டியல்
 

 

 

மநீம வேட்பாளர்கள் பட்டியல்

 


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல்

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்