Skip to main content

''20 சட்டங்கள் ஆளுநர் அலுவலகத்தில் தூங்குகிறது; அப்படி என்ன வேலை செய்கிறார்'' - டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

''20 Acts Asleep in Governor's Office; What kind of work does he do?''-TKS Elangovan interview

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்துப் பேசியதும் மற்றும் பல நிகழ்ச்சிகளில் சனாதனத்திற்கு ஆதரவாகப் பேசியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,  ''ஒரு மாநில ஆளுநர் என்பவர் மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் செயல்படுபவர். தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அதைப் பரிந்துரைக்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாநில அரசை அழைத்துப் பேசி சரி செய்துகொள்ள வேண்டும். ஆனால் எந்தக் காரணமும் சொல்லாமல் தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்திருப்பது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதை அல்ல. ஏறத்தாழ 20 சட்டங்கள் தமிழகச் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்கள் ஆளுநர் அலுவலகத்தில் தூங்குகிறது. ஆளுநர் என்ன வேலை செய்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆளுநர் அரசியல் காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

 

DMK

 

அரசியலுக்கும் ஆளுநருக்கும் தொடர்பே இல்லை. இந்த நாட்டில் ஒரு முதலமைச்சர் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதலில் அவர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்படுகிற ஒரே பதவி ஆளுநர் பதவி. அப்படி நியமிக்கப்படுகின்ற ஆளுநர் தனக்குப் பெரிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பது போல நடப்பதும், நிறைவேற்றப்படும் சட்டங்களைப்  பரிந்துரைக்காமல் இருப்பதும் தவறு.

 

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆளுநர் சொல்கிறார் ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்ததில் தவறு இருக்கிறது என்று, எனக்குப் புரியவில்லை ஆளுநர் என்பவர் தமிழ் மொழியில் மிகப்பெரிய அறிஞராக இருந்தால்தான், மூல மொழியைச் சரியாகத் தெரிந்திருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியா தவறா என்பதைச் சொல்ல முடியும். இவருக்குத் தமிழ் எந்த அளவிற்குத் தெரியும், மொழிபெயர்ப்பை எப்படி குறை சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஆளுநர் என்பதனாலே இப்படிச் சொல்கிறார். பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என்ற மரபு உருவாகிவிட்டதோ என்று நினைக்கிறேன். அதேபோல் இந்த நாட்டை, பாரதத்தை உருவாக்கியவர்கள் ரிஷிகளும், சனாதனமும்தான் என்கிறார் ஆளுநர். இந்த பாரத தேசம் 1947 ல் தான் உருவானது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.