Skip to main content

திருச்சியில் 14 ஒன்றிய சேர்மன் பதவிகளை கைப்பற்றும் தி.மு.க.

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 14. இதில் ஒன்றிய வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 241. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும்.

 

kn nehru dmk



திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.
 

திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 3 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும் கிடைத்துள்ளன.


 

வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 15 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 3 வார்டுகளும் கிடைத்துள்ளன.
 

முசிறி ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைக்கு ஒரு வார்டும், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், தாத்தையங்கார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 வார்டுகளும், சுயேச்சை களுக்கு 5 வார்டுகளும் கிடைத்து உள்ளன.


 

இந்த 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 11-ந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றுகிறது.
 

லால்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க. தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி வருகிறது. ஆனால் இந்த லால்குடி திமுக மா.செ. கே.என்.நேருவின் சொந்தவூர் என்பதால் அதிமுகவின் முயற்சியை கே.என். நேரு சுயேச்சைகளின் ஆதரவை பெற்றுவிட்டார் என்கிறார்கள்.
 

துறையூர் ஒன்றியத்திலும் நடந்து உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 9 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இங்கும் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. தீவிரமாக இறங்கி உள்ளது.
 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களை தி.மு.க. எளிதாக கைப்பற்றி உள்ளது. 2 ஒன்றியங்களில் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்து முடித்து விட்டது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு ஒரு ஒன்றியம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த கால கட்டங்களில் கூட அ.தி.மு.க. மணிகண்டம் உள்ளிட்ட சில ஒன்றியங்களில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் ஒரு ஒன்றியத்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு சரிவு ஏற்பட்டு இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.