Skip to main content

உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு விநியோகம் தொடங்கியது!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

zydus cadila

 

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்தாண்டு இறுதியில் இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில் ஸைடஸ் காடிலா நிறுவனம்,‘ஸைகோவி - டி' தடுப்பூசியை மத்திய அரசுக்கு விநியோகிக்க தொடங்கியுள்ளது. மேலும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தனது தடுப்பூசியை தனியார் சந்தையில் (தனியார் மருத்துவமனைகளுக்கு) விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

 

‘ஸைகோவி - டி' தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மொத்தம் மூன்று டோஸ்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு செலுத்தலாம் என்பதும், ‘ஸைகோவி - டி' தடுப்பூசி உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

“தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

minister ma subramanian talk about corona vaccine

 

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். கொரோனா விதிமுறை என்பது 100 சதவிகிதம் அமலில் இருக்கிறது. திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும் இடங்கள் என எதுவாக இருந்தாலும் கொரோனா விதிமுறையைக் கடைப்பிடித்து நடத்துவது நல்லது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் நாம் விழாக்களை நடத்துகிறோம். எனவே கொண்டாட்டங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமக்கு பலனளிக்கும். அதனால் கொண்டாட்டத்தின் போது தனிமனித இடைவெளி, முககவசங்கள் அணிவது உள்ளிட்டவற்றை நீங்களே உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

 

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையுடையது என்று சொல்லப்படுகிறது. பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவரின் மூலம் 17 அல்லது 18 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

 

தடுப்பூசி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “கொரோனா தடுப்பூசியை அதிகப்படுத்துவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. மேலும், தடுப்பூசியின் உற்பத்தியையும், விநியோகத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஒரு புதிய தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிற மூக்கின் வழியே மட்டும் செலுத்தும் அந்த மருந்துக்கு ரூ.800 விலை நிர்ணயித்திருப்பதாகச் செய்திகளின் வாயிலாகப் பார்த்தேன். இது தொடர்பான அறிவிப்பு அரசுக்கு முறையாக வரவில்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நம் முதல்வரின் வாயிலாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.