Skip to main content

படத்தை பார்த்து ஆயுதம் ஏந்திய இளைஞர்; தலைநகரில் நடந்த படுகொலை

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The young man armed after seeing the film and Massacre in the capital

 

டெல்லியின் வடகிழக்கு பகுதியான பஜன்புறா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (36). இவர் அமேசான் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று தனது நண்பரான கோவிந்த் சிங் (32) உடன் உணவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இரவு 11:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இவர்கள் மீது எதிரே வந்த மற்றொறு இருசக்கர வாகனம் மோதியது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் மற்றொறு பைக்கில் வந்த சமீர் என்பவர் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து ஹர்பிரீத், கோவிந்த் சிங் ஆகியோரை நோக்கி சுட்டார். இதில் ஹர்பிரீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கோவிந்த் சிங்கை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்த சமீர், தான் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் டெல்லி தலைநகரையே அதிரவைத்தது.

 

அதனைத் தொடர்ந்து, பஜன்புறா காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆறு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தனர். அந்த சோதனையில், சமீர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில், சமீர் உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர்களில், சமீர் மற்றும் பிலால் கனி என்பவர்களை நேற்று காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், 18 வயதான சமீர், இந்தியில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘ஷூட் அவுட் அட் லோக்கண்ட்வாலா’ என்ற படத்தை பார்த்து தான் ஆயுதத்தை பார்த்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும்,  இந்த படத்தில் விவேக் ஓபராய் திரையில் வைத்திருந்த மாயா எனும் பெயரில் தன்னை அழைத்து கொண்டுள்ளார். இதனால், மாயா கும்பல் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்பிலும் தனது படங்களை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதில் மாயா எனும் சமீர் கைகளில் பல்வேறு வகையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். 

 

அதனைத் தொடர்ந்து, ‘மாயா பாய் கேங்’ எனும் பெயரிலான முகநூலில், விவேக் ஓபராயின் திரைப்படப் பதிவுகள் இடம் பெற்றிருந்தன. நான்கு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சமீர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பெயர்: இழிவானவன், விலாசம்: இடுகாடு, வயது: வாழ்வதற்கானது, நோக்கம்: மரணம் என இந்தியில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான மல்லு எனும் பிலால் கனிக்கு கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் 18 வயது முடிந்துள்ளது. சிறுவயதிலேயே திருட்டுக் குற்றத்தில் சிக்கிய பிலால் கனி சிறுவர் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தார். 

 

அதன் பின் விடுதலையான பிறகு வெல்டிங் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு சமீருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீருடன் இணைந்து கொலைக் குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த கொலைக் கும்பலில் சுஹேல், ஜூனைத் மற்றும் அத்நான் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரது வயதும் 18 முதல் 25 இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.