Skip to main content

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா; குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Women's Reservation Bill President's approval

 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் கடந்த 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'நாடே வணங்குகிறது' - குடியரசு தலைவர் பெருமிதம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

 'The country bows down' - the President of the Republic is proud

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். இந்த சம்பவத்தில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி சுமார் 17 நாட்களாக நடைபெற்று, இன்று உண்மையிலேயே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

ஒரு தொழிலாளரை வெளியே அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இந்த மீட்புப் பணி முற்றிலுமாக வெற்றி அடைந்துள்ளது என தேசிய பேரிடர் மீட்புப்படை அறிவித்துள்ளது.

 

nn

 

அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகின்றனர். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்ட தொழிலாளர்களை நாடே வணங்குகிறது. அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த முயற்சியால் தான் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும், மீட்புப் படையினருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

 

latha rajinikanth meets Droupadi Murmu

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். பின்பு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார். 

 

இதையடுத்து சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில் திரௌபதி முர்முவை நடிகை மதுவந்தி தனது குடும்பத்தினருடன் வரவேற்றார். அப்போது அவருடன் லதா ரஜினிகாந்த், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.