Skip to main content

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!


புதுச்சேரியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வேலை தேடினார். அதில் கிடைத்த தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர் அயர்லாந்து நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரி பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3.5 லட்சம் கேட்டுள்ளார். அதன்பேரில் போனில் பேசிய நபர் கூறிய வங்கி கணக்கில் அந்த பெண் கூகுள் பே மூலம் 3.5 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து போன் நம்பரில் கூறியபடி, அந்த பெண் நேர்காணலுக்கு டெல்லிக்கு சென்று விசாரித்தபோது அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பணம் பெற்ற நபரை ஃபோனில் தொடர்புக் கொண்டு கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதுகுறித்து அந்த பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜிடம் கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று புகார் அளித்தார். இதையடுத்து, டி.ஜி.பி. உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு எஸ்.பி நாராயண் மேற்பார்வையில், எஸ்.பி பழனிவேல் தலைமையில், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, ஏழுமலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்

 

விசாரணையில் கோவையில் பதுங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த நாகம்மை (வயது 47) என்பவரை நேற்று முன்தினம் (23/09/2022) கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் நாகம்மை மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 10 பேரிடம் ரூபாய் 45.5 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா, முத்திரை, அரசு ஆவணங்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நாகம்மையை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நாகம்மை மகன் பிரபாகரனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகம்மை மற்றும் தலைமறைவாக உள்ள பிரபாகரன் சேர்ந்து கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 25 பேரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக போலி பாஸ்போர்ட் கொடுத்து மோசடி செய்த வழக்கு கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.