Skip to main content

அவங்க டெபாசிட்ட இழக்குறதுக்கு நாங்க சீட்டு தரணுமா? - காங்கிரசை விமர்சித்த லாலு பிரசாத் யாதவ்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

LALU PRASAD YADAV

 

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப்பினும், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியதற்கு காங்கிரசுக்கு அதிக இடங்கள் அளிக்கப்பட்டதே காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்தநிலையில், பீகாரின் குசேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் உயிரிழந்ததால், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் குசேஷ்வர் அஸ்தான் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் 7,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

 

இருப்பினும் இந்த இடைத்தேர்தலில் குசேஷ்வர் அஸ்தான் தொகுதி தங்களுக்குத் தரப்பட வேண்டும் என காங்கிரஸ் விரும்பியது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம், தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை வேட்பாளராக களமிறக்கியது. இதனால் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுடன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தது.

 

இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திடம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், (இடைத்தேர்தலில்) ஒரு சீட்டை விட்டுக்கொடுத்திருந்தால் இரு கட்சிகளுக்குமிடையேயான கூட்டணி தொடர்ந்திருக்கும் என்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், "காங்கிரசுக்கு எதற்கு சீட் கொடுக்க வேண்டும். அவர்கள் தோற்பதற்காகவா? அவர்கள் டெபாசிட்டை இழப்பதற்காகவா?" என கடுமையாக விமர்சித்துள்ளார். லாலு பிரசாத்தின் இந்த விமர்சனம் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளிடையே விரிசலை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.