Skip to main content

வந்துட்டான்யா, வந்துட்டான் ஃபேஸ்புக், யூ ட்யூப் தாண்டி வாட்ஸ் ஆப்-க்கும் வந்துட்டான்யா!!! 

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
whats app

 


சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் -ஐ பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், யூ ட்யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும், வலைப்பக்கங்களிலும் விளம்பரங்கள் வரும். அதன் மூலமாக வருவாய் ஈட்டுவார்கள். மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் வாட்ஸ் அப்பில் மட்டுமே விளம்பரம் வராமல் இருந்தது. தற்போது வாட்ஸ் ஆப்பிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வாட்ஸ் அப்பின் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது சொல்லப்படவில்லையென்றாலும், வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்கள் ஸ்டேட்டஸ் பகுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப்பின் உரிமைகளை வாங்கிய பிறகு அவ்வப்போது ஒரு மாற்றம் அல்லது அப்டேட் வரும். அதில் ஒன்றுதான் இந்த விளம்பரம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.