WB GOVERNOR

மேற்குவங்கஆளுநராகஇருப்பவர்ஜெகதீப் தங்கர். தனதுவடக்கு வங்கசுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகடார்ஜிலிங் சென்றிருந்த இவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை இரத்த பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து டெல்லி விரைந்த அவர், அங்கு இரத்தபரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்துடெல்லியில் உள்ள வங்க பவனில் தங்கியிருந்த அவரின்உடல்நிலையைமருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

Advertisment

இந்தநிலையில் ஜெகதீப் தங்கர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையைமருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.