Skip to main content

''நாங்க நம்பமுடியாது...''-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு டி.ஆர்.பாலு பேட்டி!  

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

'' We can not believe ... '' - TR Palu interview after the all-party meeting!

 

நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் நானும் திருச்சி சிவா எம்.பியும் கலந்து கொண்டோம். திமுக சார்பில் தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்சினைகள் எழுப்ப இருக்கிறோம் என்பது குறித்து விரிவாக இந்த அவையிலே சற்றுமுன் விளக்கமாக கூறியிருக்கிறோம்.

 

அரசாங்கத்தின் சார்பில் ஏறத்தாழ 31 பிரச்சனைகள் விவாதிக்கப்பட இருக்கிறது. 29 சட்டங்கள், இரண்டு பைனான்சியல் பிசினஸ் உட்பட 31 விவாதங்களை எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19 நாட்கள்தான் நடக்கப் போகிறது. இந்த 19 நாளில் 29 சட்ட வரைவுகளை எப்படி முடிவுக்கு கொண்டு வருவீர்கள். இதற்கு காலம் இடம் தராது. பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நேரத்தை நீங்கள் குறைக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச சரியான நேரம் கொடுப்பதில்லை போன்றவை திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட்டது.

 

அதேபோல் தமிழ்நாட்டு நலன் குறித்து பேசும்போது, மேகதாது திட்டத்திற்கு நீங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் டிஆர்பி எனும் திட்ட மதிப்பீட்டுக்கு எப்படி அப்ரூவல் அளித்தார்கள். உங்களுக்கு வேற வேலை கிடையாதா? நீங்கள் டிஆர்பி எனும் திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அணைகட்ட அனுமதி தரமாட்டேன் என சொன்னால் யார் நம்புவார்கள். எங்கள் அமைச்சர்களிடம் ஒன்றை சொல்லி அனுப்புகிறீர்கள். கர்நாடக முதலமைச்சர் வந்தால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்கள். எங்கள் நீர்வளத்துறை அமைச்சர் வந்தால் அவரிடம் ஒரு மாதிரி பேசுகிறீர்கள். நாங்க நம்பமுடியாது. நீங்கள் பாராளுமன்றத்தில் சொல்லுங்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நீட்டுக்கு விலக்கு அளிப்பது, மேகதாது அணை விவகாரம், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு ரிசர்வேஷன்  உட்பட மூன்று தீர்மானத்தை கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.