Skip to main content

விஸ்மயா வழக்கு- கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

vishmaya case kollam district court judgement

 

வரதட்சணைக் கொடுமை காரணமாக, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளாவைச் சேர்ந்த 22 வயது ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதன் பிறகு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததும், அவரது தந்தைக்கு அவர் பேசிய ஆடியோ உள்ளிட்டவையெல்லாம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், விஸ்மயா தற்கொலைக்கு பிறகு கேரளாவில் பெரிய அளவில் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரங்களை திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டனர். 

 

விஸ்மயா தற்கொலை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், விஸ்மயாவின் கணவரான கிரண்குமார் என்பவரை கைது செய்தனர். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இது தொடர்பான, வழக்கு விசாரணை கொல்லம் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உயிரிழந்த இளம்பெண் விஸ்மயாவின் குடும்பத்தினர், தொடர்ந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். 

 

அதன் பலனாக, வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (24/05/2022) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.