கிராம நிர்வாக அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்கியம் என்ற பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஏஓ வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் லஞ்ச பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.