Skip to main content

இனம் தாண்டிய அன்பு பிணைப்பைப் பிரித்த சட்டம்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Uttarpradesh sarus crane arif kahan

 

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆரிப் கான் குர்ஜர். இவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது வயலில் உத்தரப்பிரதேசம் மாநிலப் பறவையான சாரஸ் கொக்கு ஒன்று அடிப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதனை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்து அதனை பாதுகாத்தார். பின் உடல் நலம் குணமான பிறகும் சாரஸ் கொக்கு, தன் உயிரை காப்பாற்றி தக்க சமயத்தில் உதவி செய்த விவசாயி கான் குர்ஜரை விட்டு பிரியாமல் அன்பால் பிணைந்து அவருடனே வாழ்ந்து வந்தது. அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும் கூட அவருடனையே சாரஸ் பறந்து செல்வது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. 

 

இந்த அன்பு பிணைப்பை பார்க்க அக்கம் பக்கம் இருந்தவர்களும் விவசாயி கான் குர்ஜர் வீட்டிற்கு வந்து சாரஸ் கொக்கை பார்த்துவிட்டு சென்றனர். இந்த விவரம் அறிந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விவசாயி கான் குர்ஜர் வீட்டிற்கு நேரில் சென்று கான் குர்ஜர் - சாரஸ் இடையான அன்பு பிணைப்பை கண்டு, அவரிடம் உரையாடிவிட்டு சென்றார். 

 

Uttarpradesh sarus crane arif kahan

 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலப் பறவையான சாரஸ் கொக்கு வன உயிரியல் பறவை அதனை வீட்டில் வளர்க்கக்கூடாது என அம்மாநில வனத்துறை அதிகாரிகள் விவசாயி கான் குர்ஜரிடம் இருந்து சாரஸை பிரித்து ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர். மேலும், சாரஸ் கொக்கு இயற்கை சூழலில் தான் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். 

 

அன்பால் கட்டப்பட்ட சாரஸ் கொக்கை விவசாயி கான் குர்ஜரை விட்டுப் பிரித்தது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

 

Uttarpradesh sarus crane arif kahan

 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது; “பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்தப் பறவையை காணவில்லை. பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்பட வேண்டியது. பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் உள்ளதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

அதேபோல், சாரஸ் கொக்கை பரமாரித்து வந்த ஆரிப் கான் குர்ஜர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சாரஸ் கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4ம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆரிப் கான் குர்ஜருக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"BJP won't win more than 180 seats" - Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.