Skip to main content

கரோனா தடுப்பூசியால் மரணங்கள் இல்லை! - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

union minister harshavardhan

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இன்று ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது, கரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், மார்ச் மாதத்தில் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையில் நாம் இருப்போம். கடந்த ஏழு நாட்களாக நாட்டின் 188 மாவட்டங்களில் புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 80 முதல் 85 சதவீத முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 20 தடுப்பூசிகள் தயாரிப்பு நிலையில் உள்ளன. அவற்றை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற கனவு உலகில் எப்போதாவது நிறைவேறுமானால், அதன் மாதிரி இந்தியாவில் உருவாக்கப்படும் என்று நான் நம்புகிறேன். நமது முழுமையான அணுகுமுறை, பண்டைய மருத்துவ ஞானம், பிற சுகாதார வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் இணைந்து இவ்வுலகிற்கு ஒரு மாதிரியை உருவாக்கும். கரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் பதிவாகவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, மரணம் நிகழ்ந்தால், அது விசாரிக்கப்படுகிறது. வழக்கமான பக்கவிளைவுகள் கூட குறைந்த நபர்களுக்கே ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி.... கேரளா விரைகிறது மத்தியக் குழு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

One person in Kerala confirmed with Monkey Pox....Kerala rushes Central Committee!

 

 

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்தியக் குழு. 

 

"ஜூலை 12- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்திய குழு. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை மத்தியக் குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

மதுரை எய்ம்ஸுக்கு ஜப்பான் நிறுவனம் ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Japanese company allocates Rs 1,500 crore to Madurai AIIMS

 

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ரூபாய் 1,500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

 

மதுரை மாவட்டம், தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்ட மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1,977 கோடியில், தற்போது ரூபாய் 1,500 கோடியை ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும், மீதமுள்ள நிதியை வரும் அக்டோபர் மாதம் 26- ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.