Skip to main content

தக்காளி காய்ச்சல்; கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Tomato fever; Intensive surveillance at the state border to prevent the spread of Kerala following Tamil Nadu!

 

இந்தியா உட்பட உலகம் முழுக்க கரோனாவின் தாக்கம் மக்கள் வாழ்வையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இந்தியாவில், இதர மாநிலங்களை விட கேரளாவின் பாதிப்பு சற்று உச்சம் தான். கரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது கேரளாவில் தக்காளி காய்ச்சல் ஆரம்பமாகியுள்ளது. 


கடந்த சில நாட்களாக கேரளாவின், கொல்லம் மற்றும் அதன் மாவட்டத்திற்குட்பட்ட அஞ்சல், ஆரியங்காவு, கழுதுருட்டி, உள்ளிட்ட ஏரியாவின் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தொண்டைப் புண் எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டதுடன் தலைவலி, கை கால்கள் மற்றும் முதுகு போன்ற பாகங்களின் தோல்களில் அரிப்பு ஏற்பட்டு பாதங்களில் கொப்புளமாகவும் மாறியதுடன் உடலில் சிகப்பு நிறம் கூடிய தடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் கண்ட குழந்தைகள் பசியின்மை காரணமாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டுள்ளனர். கோடையின் போது காணப்படும் சிக்கன் பாக்ஸ் போன்ற தாக்குதலைப் போன்றிருந்தாலும், உடலில் சிகப்பு நிறம் போன்ற தடிப்புகள் காணப்பட்டதால் தக்காளிக் காய்ச்சல் என்றும் மருத்துவ வட்டாரங்கள் வெளிப்படுத்துகின்றன.


குழந்தைகளுக்கு இந்த நோய் கண்ட 5 தினங்கள் காய்ச்சலாலும், தொண்டைப் புண் போன்றவைகளோடு பசியின்மையாலும் அவதிப்பட்டுத் துவண்டு போயிருக்கின்றனர். அதன் பின்னர் தரப்படும் மருத்துவ சிகிச்சையையடுத்து, தாக்குதலின் வீரியம் குறைந்து குணமாகிவிடுகிறார்கள். ஆனாலும் இதன் தாக்கம் மிதமான பாதிப்பையே ஏற்படுத்துமாம்.


கொல்லம் மாவட்டம் முழுமையிலும் சுமார் 85க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மட்டுமே குறிவைத்து தாக்கப்படுகிற தக்காளி காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ.16. எனப்படுகிற வைரசால் ஏற்படுகின்றன. இருப்பினும். அத்தனை பெரிய, பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்கிறார்கள் கேரள சுகாதாரத்துறையினர்.


5 வயது முதல் 10 வயது வரையிலான தக்காளி காய்ச்சலால் தாக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அங்கன் வாடிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் அரசின் அங்கன்வாடிகளிலேயே வைத்து உணவு, உடை உறைவிடம் என்று பராமரிக்கப்படுகிறார்கள்.


கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு ஊராட்சிக்குட்பட்ட கழுதுருட்டி பகுதியின் அங்கன் வாடியில் சுமார் 6 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்திருக்கிறார்கள். அங்கு ஆய்வு செய்த ஆரியங்காவு ஊராட்சியின் சுகாதார ஆய்வாளரும் ஹெல்த் இஸ்பெக்டருமான அருண்குமார், அங்கன் வாடியைச் சோதனை செய்து விட்டு இங்கு 6 குழந்தைகளுக்குப் பரவல் கண்டுள்ளதால் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தொண்டையில் ஏற்படும் சளி கட்டியாகி அது தடிப்பாக வாயில் புண் ஏற்பட்டு உடலில் சிகப்பான தடிப்பும் காணப்படும். இதனால் குழந்தைகளால் உணவு உண்ண முடியாது. சிரமப்படுவார்கள். இந்தக் குழந்தைகள் விளையாடுகிற விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும் போதும், உண்ணும் பாத்திரங்கள், உடுத்துகிற ஆடைகள் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதால் தக்காளி காய்ச்சல் ஏற்படுகிறது.


இது போன்ற அறிகுறிகள். தென்பட்டால் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இம்யூனிட்டி பவர் என்கிற உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளிருக்கும் குழந்தைகளையே இந்நோய் தாக்குகிறது என்றார்.


இது குறித்து மேலும் அறியும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லினிடம் பேசியம் போது, “கடுமையான வெயில், வெப்பமடித்த பின்பு உண்டாகும் மழை மறுபடியும் வெயிலின் தகிப்பு காரணமாக ஏற்படும் அப்நார்மல் எனப்படும் அன்யூஸ்வல் க்ளைமேட் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகையான ப்ளூ வைரஸ் வகையைச் சேர்ந்தது தான்” என்கிறார்.


கேரளாவில் கண்டறியப்பட்ட தக்காளி காய்ச்சலின் தாக்கம் தமிழகத்திற்குள்ளும் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தின் எல்லையை ஒட்டி கேரளாவின் கொல்லம் மாவட்டம் அமைந்திருப்பதால், தென்காசி சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அனிதா தலைமையிலான சுகாதார உயரதிகாரிகள் எல்லைப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.