Skip to main content

ரஞ்சன் கோகாயின் அந்த நான்கு நிமிடங்கள்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற எண் ஒன்றில்தான் ரஞ்சன் கோகோய் அமரும் அறை உள்ளது.
 

df



கடைசியாக இன்று அவரது அறையில் நான்கு நிமிடங்கள் மட்டுமே அமர்ந்து அவரது பணிகளை முடித்தார். நாளை சனிக் கிழமை, மறுநாள் ஞாயிறு என்பதால் அவர் விடுமுறையில் இருப்பார். எனவே நீதிமன்றத்துக்கு அவர் வருவது இன்றே இறுதி நாளாக கருதப்படுகிறது. பார் கவுன்சில் சார்பில் இன்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..?...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

ranjan gogoi tested positive for corona

 

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என பரவிய தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவில், சமீபகாலமாகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் இந்த வைரஸால் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராமர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த தகவல்களை ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.

 

Next Story

மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன எம்.பியாக பதவியேற்றார். மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்க்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

supreme court former chief justice ranjan gogoi take oath as rajay sabha

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய் எம்.பியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.