Skip to main content

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று விவசாயிகள் - கரையில் அழுது பரிதவிக்கும் உறவுகள்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Three farmer-river weeping relations who were swept away by the river

 

நிவர் புயல்,  தமிழகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கடந்து சென்றுவிட்ட நிலையில், பக்கத்து மாநிலமான ஆந்திராவில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை மீட்கும்பணி தொடர்கிறது.

ரேணிகுண்டா அருகிலுள்ள ஏர்பேடு கிராமத்தைச் சேர்ந்த  மூன்று விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டார்களைப் பத்திரப்படுத்துவதற்காக, ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். அப்போது, ஆற்றில் பெருவெள்ளம் வர, அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினரும், போலீஸாரும் முகாமிட்டு, மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Three farmer-river weeping relations who were swept away by the river


இதில் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். அவரது நிலை என்னவென்று தெரியவில்லை. மற்ற இருவர், ஆற்றின் நடுவில் இருந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தவித்து வருகின்றனர். அவர்களது உறவினர்கள்,  ஆற்றின் கரையோரம் பரிதவிப்போடு காத்திருக்கின்றனர்.

 

Three farmer-river weeping relations who were swept away by the river!


நிவர் புயலினால், சித்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதனால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருநாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அம்மாவட்ட கலெக்டர் பரத் குப்தா, மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முகாமிற்கு உடனடியாகச் சென்று தங்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.