Skip to main content

"திருடர்களும் ரவுடிகளும் பாஜகவில் இணைகின்றனர்"  - மம்தா பானர்ஜி ஆவேசம் 

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

"Thieves and rowdies join BJP" - Mamata Banerjee

         

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமான வார்த்தை யுத்தங்கள் தடித்து வருகின்றன. 

 

பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “திருடர்களும், ரவுடிகளும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்” என ஆவேசப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பகீரத பிரயத்தனத்தில் குதித்துள்ளது பாஜக. இதற்காக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரசிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரையும் பாஜகவில் இணைத்து வருகிறார்கள். இதற்காக, அடிக்கடி மேற்கு வங்கத்துக்குப் பயணப்படுகிறார் அமித்ஷா. அண்மையில் கூட திரிணாமுல் காங்கிரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி, பாஜகவில் இணைந்திருந்தார்.

 

மேற்கு வங்க அரசியல் குறித்து சமீபத்தில் பேசிய அமித்ஷா, “திரிணாமுல் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் அந்தக் கட்சியில் முதல்வர் மம்தா மட்டுமே இருப்பார்” என்று விளாசியிருந்தார்.

 

அமித்ஷாவின் இந்தப் பேச்சு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்ல, மம்தா பானர்ஜியையும் கோபப்பட வைத்திருக்கிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தின் அலிபுர்துவாரில் தேர்தல் பொதுக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது திரிணாமுல் காங்கிரஸ்.
 


கூட்டத்தில் மைக் பிடித்த மம்தா பானர்ஜி, பாஜகவை சரமாரியாக ஒரு பிடி பிடித்திருந்தார். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவுபவர்களையும், அதற்கு காரணமாக இருக்கும் பாஜகவையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசும்போது, “அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பாஜகவில் சேர்கிறார்கள். அவர்கள் எங்களை (திரிணாமுல் காங்கிரஸ்) தோற்கடிப்பார்கள் என பாஜகவினர் கூறுகின்றனர். உங்களால் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க முடியாது. எனக்கு நிறைய புகார்கள் வருகிறது. விசாரித்து வருகிறோம். சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது” என்று ஆவேசப்பட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.