Skip to main content

கேரளா பெட் ஷாப்பில் நாய்க்குட்டி திருட்டு; கர்நாடகாவில் கல்லூரி மாணவன், மாணவி கைது

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

 Theft in pet shop; College student, student arrested

 

கேரளாவில் பெட் ஷாப் கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி கல்லூரி மாணவனும் மாணவியும் குட்டி நாயை ஹெல்மெட்டில் திருடிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பெட் ஷாப் ஒன்றுக்கு இன்ஜினியரிங் மாணவரும் மாணவியும் சென்றுள்ளனர். அப்பொழுது அங்குள்ள செல்லப்பிராணிகளை பார்ப்பது போல் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த இருவரும், கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு அங்கு கூண்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாய்க்குட்டியை ஹெல்மெட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சென்று விட்டனர்.

 

அதன் பின்பு கடை உரிமையாளர் கூண்டிற்குள் நாய் இல்லாததை அறிந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் கடைக்கு வந்திருந்த மாணவனும் மாணவியும் நாய்க்குட்டியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட நாய்க்குட்டியின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில், போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் நாய்க்குட்டியை திருடிய இருவரும் உடுப்பி சென்றது தெரியவந்தது. வாகன எண்ணை வைத்து திருடியவர்கள் வீட்டுக்குச் சென்ற போலீசார் நாய்க்குட்டியை மீட்டனர்.

 

இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பொறியியல் படித்து வந்த மாணவன், மாணவி என்பதும், பைக்கிலேயே இருவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.