Skip to main content

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Terrible fire in the apartment

தெலங்கானா மாநிலம், மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டம், குத்புல்லாபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று (28-02-24) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த கட்டிடத்தில் இருக்கின்ற மக்கள், உடனே அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்