Skip to main content

தொடரும் வன்முறை; பா.ஜ.கவின் போராட்டத்தால் பதற்றம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Tension due to BJP's struggle in west bengal

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆறாம் கட்டமாக 8 தொகுதிகளில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில், சில நாட்களாக பல நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் பா.ஜ.க கட்சியினர், தங்களின் பெண் தொண்டரில் ஒருவரான ரோட்டிபாலா ஆரி மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி பா.ஜ.க.வினர் இன்று (23-05-24) நந்திகிராம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டயர்களை எரித்தும், கடை உட்பட பல இடங்களில் தீ வைத்தும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுபேந்து அதிகாரி கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் தூண்டுதலின் நேரடி விளைவுதான் இது. அவர்கள் தோல்வி நெருங்கி விட்டது என்று தெரிந்தும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலையைத் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க முடிவு காணும். சட்டரீதியாக பழிவாங்கப்பட்டு, ஜனநாயக ரீதியாக தகுந்த பதில் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தேர்வை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக ஆட்சியை ரத்து செய்யலாம்' - அகிலேஷ் கருத்து

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'Instead of canceling the election, we can cancel the BJP rule' - Akhilesh's opinion

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

nn

இந்நிலையில் இதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்தில், 'தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்கிறார்கள்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

'நான் ஆர்ப்பாட்டத்துக்கே வரலங்க; விட்ருங்க' - கதறிய முதியவர்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'I am not concerned about the demonstration; -the wailing old man

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.