Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; காதலியைக் கொடூரமாகக் கொன்ற கோவில் பூசாரி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Temple priest drama after incident passed away girlfriend in Hyderabad

 

காதலியைக் கொலை செய்துவிட்டு கோவில் பூசாரியே காவல்துறையில் புகார் கொடுத்து நாடகமாடிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான சம்சாராவில் வசித்து வந்தவர் அப்சரா(30). கடந்த 3 ஆம் தேதி பத்ராச்சலம் சென்று தோழிகளைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அப்சரா அதன்பின் வீடு திரும்பவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அப்சரா குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அப்போது  அருகே உள்ள கோவில் பூசாரியும் அப்சராவின் நெருங்கிய நண்பரான வெங்கட சாய் என்பவரை அப்சராவின் தந்தை உடன் அழைத்துச் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்சரா குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை இறுதியாக அப்சரா சரூர் நகரில் நின்று கொண்டிருந்த காரில் ஏறியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து அந்த காரில் சென்ற வழித்தடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்தபோது அந்த காரை பூசாரி வெங்கட சாய் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வெங்கட சாயை பிடித்து விசாரித்ததில், அப்சராவை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், “அடிக்கடி கோவிலுக்கு வரும் அப்சராவுக்கும் பூசாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இப்படி இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அப்சரா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வெங்கட சாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களைக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரின் நெருக்கடி அதிகமாகவே, அப்சராவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரைத் தனியாக அழைத்துள்ளார். அதனால் வீட்டில் தோழிகளைப் பார்ப்பதற்காக சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அப்சராவும் வெங்கட சாய் உடன் சென்றுள்ளார். காரில் அப்சராவை சரூர் பகுதியிலிருந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தனக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். கோவில் பணிக்காகவே இங்கே இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்சரா அவருடன் தகராறு செய்திருக்கிறார். இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வெங்கட சாய், அப்சராவை தாக்கி தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை மீண்டும் சரூர் நகர் எடுத்து வந்து அருகே உள்ள கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கழிவு நீர்த் தொட்டியிலிருந்து உடலை மீட்ட போலீசார் பூசாரி வெங்கட சாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.