Skip to main content

தமிழக பாஜக தலைவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களின் மொத்தம் எண்ணிக்கை ஒன்பது ஆகும். அதில் தமிழகம்-1, பீகார்-2, குஜராத் -2, ஒடிஷா-4, உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளன. தமிழகத்தில் அடுத்த மாதம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தை தவிர்த்து மீதமுள்ள எட்டு இடங்களுக்கான தேர்தல் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், தமிழருமான ஜெய்சங்கர் இன்று மனுதாக்கல் செய்தார்.

 

 

TAMILNADU BJP LEADERS MAY SELECT THE RAJYA SABHA

 

 

இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு வாய்ப்பளிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் தமிழக பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் நான்கு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 23 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ஒடிஷா மாநிலத்தில் இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி பாஜகவிற்கு கிடைக்கும். இந்த மாநிலத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தமிழக பாஜக தலைவர்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல் பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது.

 

 

TAMILNADU BJP LEADERS MAY SELECT THE RAJYA SABHA

 

 

 

அந்த மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களில் ஒரு இடத்தை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி வட மாநிலங்களில் அபார வெற்றியும், தென் மாநிலங்களில் தோல்வியையும் தழுவியது. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைவர்கள் பலரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு ராஜ்ய சபா பதவி வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.