Skip to main content

ஆளுநர் தமிழிசையை கண்டித்து போராட்டம்; புதுச்சேரியில் பரபரப்பு 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

tamilisai comment for supreme court judgment related incident puducherry 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை  கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் புதுச்சேரி மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக சமூக நல அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று (23.05.2023) இருபதுக்கும் மேற்பட்ட சமூக நல அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்று கூடினர்.

 

இதனைத் தொடர்ந்து ஆளுநரை கண்டித்த பதாகைகளைக் கையில் ஏந்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புக் கட்டை அமைத்து தடுத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் தலைமை தபால் நிலையம் முன்பே துணை நிலை ஆளுநர் தமிழிசையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

tamilisai comment for supreme court judgment related incident puducherry 

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகந்நாதன், தமிழர்களம் கோ.அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாறன், தமிழ் மீனவர்கள் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையர்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஸ்ரீதர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம் மற்றும்  20க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ' புதுச்சேரி மக்களின் உரிமைகளுக்கு எதிராக கருத்து கூறும் துணை நிலை ஆளுநர் தமிழிசையே புதுச்சேரியை விட்டு உடனே வெளியேறு!' என கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“நானும் முதலமைச்சரும் அண்ணன் தங்கை போல் இணைந்துள்ளோம்” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Governor Tamilisai said that Me and the Cm narayanasamy are like brother and sister

 

திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் தெலுங்கானா மாநில ஆளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்திற்கு வருகை தந்து யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து விஜயா ராமநாதன் பாடிய யோகிராம் சுரத்குமார் பக்தி பாடல்கள் ஒலித்தட்டு மற்றும் யோகிராம் சரத்குமார் துதி ஆரம் புத்தகத்தையும் வெளியிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாண்டிச்சேரி வளர்ச்சிக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நானும் அண்ணன் தங்கையாக பணியாற்றுகிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாண்டிச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் மாற்றம் குறித்து முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்.’ பாராளுமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, ‘அருணாச்சலேஸ்வரர் தான் முடிவு எடுக்க வேண்டும்.’ என்றார்.

 

தெலுங்கானாவில் தமிழ் வழிக் கல்வி பள்ளிகள் மூடப்படுவது குறித்த கேள்விக்கு, “அது தவறானது அவ்வாறு நடைபெற்றால் நான்தான் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பேன், தமிழுக்காக தமிழிசை என்றென்றும் பாடுபடுவேன் குரல் கொடுப்பேன். சனாதனத்தை பற்றி பேசுபவர்களின் குடும்பத்தில் சிலர் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கிறார்கள், ஒரு பேஷனுக்காக கூறுகிறார்கள். ஆன்மீகத்தை பற்றியும் அதன் அதிசயத்தை பற்றியும் முழுவதுமாக உணர்ந்து இருந்தார்கள் என்றால் அவர்கள் பேசமாட்டார்கள். தன்னைப் பொறுத்தவரையில் நாக்கினால் மட்டும்தான் பேசுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஆன்மீகம் இருக்கிறது. 

 

ஒரு மருத்துவர் தனக்கு உயிர் தெரியவில்லை அதற்காக உயிரே இல்லை என்று சொல்ல முடியுமா. அதேபோல் சனாதனத்தை பற்றி பேசுபவர்களுக்கு இறைவன் தெரியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று சொல்ல முடியாது” என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்