Skip to main content

திருப்பதி திருமலையில் விரட்டப்படும் தமிழ் ஊடகத்தினர்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் கூட்டம், சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் என மாதம் இரண்டு முறை கூடும். ஏழுமலையான் கோயில் நிர்வாகம், பக்தர்களின் முறையீடுகள் போன்றவற்றை பற்றி கலந்துரையாடுவார்கள். இதுப்பற்றிய செய்திகளை, திருப்பதி திருமலை தேவஸ்தான செய்திகளை தமிழக மக்களுக்கு கூற தமிழகத்தின் பெரும்பாலான தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் அங்கு செய்தியாளர்களை நியமனம் செய்துள்ளது.

 

Tamil media out of Tirupati Thirumalai

 

திருப்பதி திருமலை தேவஸ்தான செய்திகளுக்கு செய்தியாளர்களை நியமனம் செய்யக்காரணம், திருப்பதிக்கு அதிக அளவு பக்தர்கள் தமிழகத்தில் இருந்தே செல்கிறார்கள். தினசரி சராசரியாக 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இதில் 40 சதவிதம் பக்தர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ள 60 சதவிதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதோடு, அந்த கோயிலில் தமிழகத்துக்கும் உரிமையுள்ளது. அதனால் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தமிழக மக்களுக்கு தெரிவிக்கவே செய்தியாளர்களை நியமித்துள்ளன நிறுவனங்கள்.
 

தமிழ் பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு சிலச்சில தொந்தரவுகளை தந்து வந்த திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம், பிப்ரவரி 29ந்தேதி நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழக மீடியாக்களை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியுள்ளார் கோயில் பி.ஆர்.ஓ ரவி.

அரங்க கூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தெலுங்கு, ஆங்கில மீடியாக்கள், செய்தித்தாள்களுக்கு மட்டும்மே அனுமதி, தமிழக செய்தித்தாள், மீடியாக்களுக்கு இனி அனுமதியில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் ஊடகத்துறையினர் கேள்வி எழுப்ப பதில் சொல்ல மறுத்துள்ளார். கூட்டம் முடியும் வரை செய்தியாளர்கள் வெளியேவே நின்றுக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுயிருந்தனர். அவர்களும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை என்கின்றனர் ஊடகவியாளர்கள்.

திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் திருப்பதி பெருமாள் கோயில் கிளையை கன்னியாகுமரியில் கட்டுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறது தமிழகரசு. ஆனால் திருப்பதி திருமலையில் தமிழ் ஊடகத்தினரை துரத்துகிறது அந்நிர்வாகம். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.