குடியுரிமை திருத்த சட்டத்தைஎதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தசட்டத்திற்கு எதிரான 144 மனுக்களின் மீதான விசாரணையில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்தொடரப்பட்டது. அப்படி தொடரப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிஏஏ வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். மேலும் இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.