Skip to main content

தீப்பிடித்து எரிந்த ஸ்ரீசாந்த் வீடு! போலீஸ் விசாரணை

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

 

s

 

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது.

 

s

 

ஸ்ரீசாந்த் வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். திருக்காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்தனர்.  அவர்கள், ஸ்ரீசாந்த் வீட்டில் இருந்து தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டின் முன்பக்க அறை எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

 

இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஸ்ரீசாந்துக்கு மீதான வாழ்நாள் தடை நீக்கம்                

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

                                                                                                                     
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.  மேலும்,  ஸ்ரீசாந்த் போட்டியில் பங்கேற்பது  குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.        

 

ஸ்ரீசாந்த் மீதான கேரள உயநீதிமன்றம் தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக  ஸ்ரீசாந்தின் மனு மீது 3 மாதத்தில் முடிவெடுக்க பிசிசிஐக்கு உத்தரவிடப்ப்ட்டுள்ளது.                

                                                                                                       

s