
மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜியின் மருமகன் அபிஷேக்பானர்ஜியும் அரசியலில்ஈடுபட்டுள்ளார். அவர், தற்போது நாடாளுமன்றஉறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்றஒரு பேரணியில்,மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை அவதூறாகப் பேசியதாக அபிஷேக்பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள்மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அபிஷேக்பானர்ஜிதொடர்ந்தஇந்த வழக்கு, இன்று விசாரணைக்குவந்தது. அப்போது இந்த வழக்கைவிசாரித்தநீதிபதி, வரும் பிப்ரவரி22 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோநீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமெனஉத்தரவு பிறப்பித்து, அமித்ஷாவுக்குநோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)