Skip to main content

7.4 கோடி பரிசுத்தொகையை சக போட்டியாளர்களுடன் பகிரும் இந்திய ஆசிரியர்...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

solapur teacher wins international award

 

 

சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற இந்திய ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே, தனக்கு கிடைத்த 7.4 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தன்னுடன் இந்த விருதுக்கான போட்டியில் இருந்த சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். 

 

லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கி சிறப்பாகக் கல்வி சேவையாற்றும் ஆசிரியர்களை கௌரவித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதுக்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இதிலிருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இத்தாலி, பிரேசில், வியட்நாம், பிரிட்டன், தென் கொரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்திய ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சிறந்த சர்வதேச ஆசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

 

கன்னட மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மகாராஷ்ட்ராவின் சோலாபூர் மாவட்டம், பரத்வாடே பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் ரஞ்சித் சிங் திசாலே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அப்பகுதியில் உள்ள மக்களுக்காகக் கன்னட மொழியை கற்று, அங்குள்ள மக்களிடையே பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண் குழந்தைகளை யாரும் படிக்க அனுப்புவது கிடையாது என்ற அவல நிலையை மாற்றியவர் ரஞ்சித் சிங் திசாலே. அதுமட்டுமின்றி, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை எளிமையாக்கினார் இவர். இவரின் இந்த சேவையைப் பாராட்டும் விதமாகச் சிறந்த ஆசிரியராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விருது வென்றது குறித்து பேசியுள்ள ரஞ்சித் சிங் திசாலே, "ஆசிரியர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் 50 சதவீத தொகையை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர 9 ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.