Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; தம்பியை 20 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாகக் கொன்ற அக்கா

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 sister brutally incident her younger brother by cutting her into 20 pieces

 

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் சிந்திகி அருகே உள்ள தேவனாங்காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. இந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பாவின் மகள் பாக்கியஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2015ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனாலும் இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர்.    

 

இதையடுத்து சங்கரப்பாவுக்கு திருமணமாகியது. கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களிலேயே அவர் மனைவியைப் பிரிந்து சொந்த கிராமத்தை விட்டு கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தனியாக அறை எடுத்து தங்கியபடி வேலை செய்து வந்த சங்கரப்பா, தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது கைப்பேசியில் பேசி வந்தார். மீண்டும் அவர்களுக்குள் காதல் நெருக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சங்கரப்பா, ஒருநாள் காதலியை ஜிகினிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பாக்கியஸ்ரீ அதன்பின் வீடு திரும்பவில்லை. காதலர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.    

 

இந்நிலையில், பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22) கடந்த 2015ம் ஆண்டு அக்காவைத் தேடி ஜிகினி பகுதிக்குச் சென்றார். அங்கு தனது அக்கா சங்கரப்பாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருவதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். சங்கரப்பா ஏற்கனவே திருமணமானவர். அவருடன் வாழ வேண்டாம் என்றும், தன்னுடன் சொந்த ஊருக்கு வந்துவிடுமாறும் அக்காவை லிங்கராஜ் அழைத்துள்ளார். அதற்கு பாக்கியஸ்ரீ மறுத்துவிட்டார். ஆனால், லிங்கராஜ்  தொடர்ந்து அவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

 

தனது காதல் வாழ்க்கைக்கு தம்பி இடையூறாக இருப்பதாக எண்ணிய பாக்கியஸ்ரீ, காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்தார். பின்னர் சடலத்தை 20 துண்டுகளாக வெட்டி 3 பைகளில் அடைத்து ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சனஅள்ளி ஏரிகளில் வீசிவிட்டனர். இதையடுத்து பாக்கியஸ்ரீயும் சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பித்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். மற்றொருபுறம் லிங்கராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஜிகினி காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில்தான், கொலையாளிகள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது ஜிகினி காவல்துறைக்கு தெரியவந்தது. ரகசியத் தகவலின் பேரில் மார்ச் 19ம் தேதி காவல்துறை தனிப்படையினர் மகாராஷ்டிரா மாநிலம் விரைந்தனர். அங்கு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த பாக்கியஸ்ரீ, சங்கரப்பா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவுக்கு தொல்லையாக இருந்த தம்பியை அக்காவே காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த  வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.