Skip to main content

ஒற்றை தலைமை விவகாரம்; மாறி மாறி ஊழல் புகார் சொல்லும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள்!  

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

single leadership issue; ADMK district secretaries complaining of corruption in turn!

 

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திலும், மேற்கு மாநில அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகரும் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்து, ஏட்டிக்கு போட்டியாக பேட்டியளித்தனர்.

 

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க மேற்கு மாநில கட்சி அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கட்சி பணிகள் செய்வதற்காக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் கட்சியின்  தலைமையிடம் பெற்றுள்ளார். 

 

மேலும் கட்சிக்கு விரோதமாக அன்பழகன் செயல்படுகிறார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிவு வந்த போது ஜானகி அணிக்கு சென்றவர் அன்பழகன். 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவின் தலைமையை ஏற்றார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் துவங்கிய போது அன்பழகன் பல கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் பெற்று சசிகலா பக்கம் சென்றார். கட்சி ஒருங்கிணைந்த போது கையூட்டு பெற்று கொண்டு தான் அபிடவிட் அளித்தார். பல லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு தான் தற்போது பொதுக்குழுவில் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழன் கலந்து கொண்டார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் இணைந்து பேசி ஒற்றை தலைமை யார் என அறிவித்தால் நல்லது. கட்டாயப்படுத்தி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது. மேலும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய நான்கு பேரும் தொண்டர்களை சந்தித்து வரும் நிலையில் கட்சி யாரிடம் செல்கிறதோ அவருக்கு புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கும்" என்று தெரிவித்தார். 

 

single leadership issue; ADMK district secretaries complaining of corruption in turn!

 

அதனைத் தொடர்ந்து மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாநில செயளாலர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.கவை பொறுத்தவரை அ.தி.மு.கவிற்கு ஒற்றைத் தலைமை என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பதில் நிர்வாகிகள் உறுதியாக உள்ளோம். கட்சி நடத்த நான் காசு வாங்குவதாக ஓம்சக்தி சேகர் கூறுவது ஒட்டுமொத்தமாக அ.தி.மு.கவினரை அவமதிக்கும் செயல். அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்துகிறார். 

 

ஓ.பி.எஸ்சின் பினாமியாக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளார். அவர் ரூ.30 கோடி மதிப்பில் அரியூரில் இடம் வாங்கியுள்ளார். ஓ.பி.எஸ் தமிழகத்தில் அடித்த பணத்தை ஓம்சக்தி சேகர் மூலம் புதுச்சேரியில் நில வணிகத்தில் முதலீட்டு செய்துள்ளார். இது குறித்து அமலாக்க துறையிடம் புகார் செய்ய உள்ளேன்" என பதிலடி கொடுத்தார்.

 
புதுச்சேரி அ.தி.மு.கவின் இரு மாநில செயலாளர்களும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருவரை ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக கடும் விமர்சனம் செய்து வருவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.