Skip to main content

“50 கோடி ரூபாய் செலவில் சித்த மருத்துவக் கல்லூரி” - புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 "Siddha Medical College at a cost of 50 crore rupees" - New Chief Minister Rangaswamy announced

 

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், உறுப்பினர்கள் கேள்வி பதில் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. அப்போது புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் திறக்கப்படுமா எனறு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் போர்க்கொடி தூக்கினர்.

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, "நேரடி பணப் பரிமாற்றம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச திட்டங்களுக்கான விநியோகம் செய்யும் பொருட்களுக்கு பதிலாக பணமாக வங்கியில் செலுத்தப்படுகின்றது. ரேஷன் கடையில் பணியாற்றிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்க  ரூ.7 கோடிக்கு ஒப்புதல் கேட்டு தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.  நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட தானியங்கள் விநியோகிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.

 

தொடர்ந்து உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு "புதுச்சேரி கோரிமேட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே 50 கோடி ரூபாய் செலவில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். புதுச்சேரியில் சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கியதை தொடர்ந்து கண்டெய்னர்கள் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு அனுப்ப அதற்கென தனியாக ரிங் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும்." என பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.