Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

Advertisment

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தங்கள் தாலியை இழக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று (22-04-24) மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளார். மத உணர்வைகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு இந்துக்களுக்கும் அநீதி ஏற்படவில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும். பா.ஜ.க நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குகிறது. அவர்கள் மக்களை மத அடிப்படையில் போராட வைக்கிறார்கள். போராடுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை.