Skip to main content

தேர்வறையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்... உதவி பேராசிரியருக்கு ஓட ஓட அடி!!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

தேர்வறையில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை பிடித்த மாணவர்கள் துரத்தித் துரத்தி சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Sexual harassment for college student ...


தெலுங்கானாவில் கரீம்நகர் மாவட்டம் தீமாப்பூரில் உள்ளது ஸ்ரீ சைதன்யா பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் வெங்கடேசன் என்பவர் மாணவி ஒருவரிடம் தேர்வறையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

Sexual harassment for college student ...

 

Sexual harassment for college student ...

 

உதவி பேராசிரியரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த மாணவி சக மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் அந்தப் பேராசிரியரை நிற்கவைத்து கேள்வி கேட்டனர். ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பேராசிரியர் வெங்கடேஷ் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து ஓட்டம் பிடித்தார். ஆனால் மாணவர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து சரமாரியாக அடித்தனர்.

 

Sexual harassment for college student ...

 

கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அந்த உதவி பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரீம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.