Skip to main content

11,000 புள்ளிகளை நோக்கி நிப்டி! இறங்கினால் முதலீடு; ஏறினால் விற்றுவிடலாம்!!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sensex, nifty points mumbai sharemarket

 

பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் பலரின் கணிப்புகளையும் தகர்த்து, இந்தியப் பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன்தான் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான நம்பகமான தரவுகளும் கூட சந்தை ஏற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி- 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3- ஆம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.இ. மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.

 

''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நோக்கியே நகர்கின்றன. இன்ட்ராடே வணிகத்தைப் பொருத்தவரை, சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்கிறார் ஜியோஜித் நிதி சேவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வினோத் நாயர். 

 

சந்தையில் இப்போதும் நிலையற்றத் தன்மையே நிலவுவதால், நிப்டியில் இன்றைய (ஜூலை 6) வர்த்தகம் 10,569 புள்ளிகள் முதல் 10,531 புள்ளிகள் வரை இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவேளை, இன்றைக்கும் ஏற்றத்தில் இருக்கும்பட்சத்தில் 10,638 - 10,669 என்ற வரை உயர்வு இருக்கலாம் என்கிறது மணிகன்ட்ரோல் பங்குத்தரகு நிறுவனம்.

 

அதேநேரம், எல்.கே.பி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ரோஹித் சிங்கர், இன்று அல்லது நடப்பு வாரத்தில் நிப்டி 10,700 முதல் 10,800 புள்ளிகளைக் கடக்கலாம் என்கிறார். வர்த்தகம் ஏற்றத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் லாபத்தை புக்கிங் செய்வது நல்லது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

 

மோதிலால் ஆஸ்வால் பங்குத்தரகு நிறுவனமும், 10,800 புள்ளிகளை நோக்கி நிப்டியின் வர்த்தகம் நகரக்கூடும் என கணித்துள்ளது. ஒருவேளை, இறங்குமுகமாக இருந்தால் நிப்டி 10,450 - 10,333 புள்ளிகள் வரை சரியக்கூடும் என்கிறார் இந்நிறுவனத்தின் சந்தன் தபாரியா.

 

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனமோ, நிப்டியின் ராஜநடை 11,000 புள்ளிகளை நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது. சரிவு காணும்பட்சத்தில் 10,500 - 10,470 புள்ளிகளாக இருக்கலாம். அந்தளவுக்குச் சந்தையில் சரிவு இருக்கும்போது லாபகரமான பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் அந்நிறுவனதின் சந்தை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகிறார்.

 

கடந்த வாரத்தில் நிப்டி ஏற்றத்திற்கு பெரிதும் துணைபுரிந்த வங்கிப் பங்குகள் கடைசி நாளன்று (ஜூலை 3) 0.46 சதவீதம் வரை சரிந்து, 21,852.40 புள்ளிகளில் முடிவடைந்தன. இன்று வங்கி பங்குகளின் ஆதரவுப் புள்ளிகள் 21,703 - 21,554 என்ற அளவில் இருக்கலாம் எனக் கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள். அல்லது, வங்கிப் பங்குகள் ஏற்றம் பெற்றால் 22,065 புள்ளிகள் முதல் 22,279 புள்ளிகள் வரையிலும் கூட செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

http://onelink.to/nknapp

 

இன்று காலாண்டு முடிவுகள் வெளியிடும் நிறுவனங்கள்:

 

என்.பி.சி.சி. (இண்டியா), சத்பவ் இன்ப்ராஸ்ட்ரக்சர் புராஜக்ட், பிசிஎல் இண்டஸ்ட்ரீஸ், பி.எம்.டபுள்யூ இண்டஸ்ட்ரீஸ், போடல் கெமிக்கல்ஸ், டி.சி.டபுள்யூ, டைனமிக் இண்டஸ்ட்ரீஸ், ஐ.எப்.பி. அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், ஐ.எப்.பி. இண்டஸ்ட்ரீஸ், ஜே.எம்.டி. வென்ச்சர்ஸ், நைசா கார்ப்பரேஷன், வெல்கியூர் டிரக்ஸ் அன்டு பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இந்நிறுவனங்களின் வளர்ச்சியைப் பொருத்து இந்நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு கிடைக்கப் பெறலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.