Skip to main content

ராமருக்கு உதவியது எந்த சாதியினர்..? கோவா ஆளுநர் பேச்சு...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கோவா ஆளுநராக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் கோவா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற சத்யபால் மாலிக், தெற்கு கோவாவின் பொண்டாவில் நடைபெற்ற இரண்டாவது பழங்குடி மாணவர் மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்றார்.

 

sathya pal malik about ram mandir

 

 

அப்போது பேசிய அவர், "அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவது தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. உயர் அந்தஸ்து வகிக்கும் மடாதிபதிகளும், துறவிகளும் கூறுவதை தினந்தோறும் இதுகுறித்து பேசுவதை கேட்க முடிகிறது. ராமர் கோவில் பற்றி அவர்கள் பேசும் போது, ராமரின் சிலைகள் மற்றும் ஆட்சியை பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால், சீதா தேவி, ராவண மன்னனால் கடத்தப்பட்ட போது, ராமரின் சகோதரர் அயோத்தியின் மன்னராக இருந்தார். ஆனால், ராமருக்கு உதவ ஒரு படை வீரர் கூட வரவில்லை.

மேலும், ராமர் இலங்கைக்கு நடைபயணமாகவே சென்ற போது, ஆதிவாசிகள், பழங்குடியின மக்கள் என தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களே உதவினர். உயர் சாதியைச்சேர்ந்த யாராவது, ராமருக்கு உதவினார்கள் என்று என்னிடம் யாராவது விளக்க முடியுமா?  எனவே, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மண்டபத்தில் ராமருக்கு உதவிய அனைவரையும் சித்தரிக்க வேண்டும் என்று முறைப்படி கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ - 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
letter from mother who lost his lives 4-year-old son at goa incident

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி,  கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

letter from mother who lost his lives 4-year-old son at goa incident

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. 

Next Story

4 வயது மகனைக் கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற சம்பவம்; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Shocking information released by the police for 4-year-old son was incident

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வாழ்கின்றனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில், சுசானா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த 4 வயது மகன், வெளியே செல்லும்போது உடன் இல்லாதது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரை தொடர்புகொண்டு பேசியபோது, கார் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்றுகொண்டிருப்பதும், காரில் சுசானா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும், கார் ஓட்டுநரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர்.

Shocking information released by the police for 4-year-old son was incident

அதன்படி, கார் ஓட்டுநர் ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். அங்கு கோவா போலீசார் கொடுத்த தகவலின்படி, காரை போலீசார் சோதனை செய்தனர்.  அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, வெங்கட்ராமன் பணி விஷயமாக இந்தோனேசியாவுக்கு சென்றுவிட்டார். மேலும், சுசானா சேத்துக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Shocking information released by the police for 4-year-old son was incident

அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் செல்போன் வீடியோ அழைப்பு மூலம் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவா சென்றுள்ளார். அப்போது மறுநாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்துள்ளார். ஆனால், சுசானா சேத் அந்த அழைப்பை எடுத்துப் பேசி, தனது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

இருப்பினும், வெங்கட்ராமன் அடிக்கடி சுசானா சேத்தை செல்போனில் அழைத்தபடி இருந்துள்ளார். அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்தான். இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.