Skip to main content

பாகிஸ்தான் மருமகள் தேவை இல்லை; பாகிஸ்தானை பழிவாங்க பாஜக எம்.எல்.ஏ புதிய யோசனை...

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

ghfghgfhfg

 

புல்மாவா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட பல  பிரபலங்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரபலங்கள் என்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் விதமாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட சில நபர்கள் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறார்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்' என கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங், 'தெலுங்கானா மாநிலத் தூதர் பதவியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அந்த பதவியை விட்டு நீக்க வேண்டும், பாகிஸ்தானின் மருமகள் இங்கு தேவையில்லை. சானியா மிர்சாவை நீக்குவதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கு அதிர்ச்சி அளித்து, தீவிரவாதத்துக்குத் துணைபுரியும் பாகிஸ்தானுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்க இயலும்' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

டேட்டிங் செய்த நடிகையுடன் திருமணம் - சானியா மிர்சாவை பிரிந்த கிரிக்கெட் வீரர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Sania Mirza divorce Shoaib Malik and Shoaib Malik marriage Pakistan actress

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக், 2006ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அதே ஆண்டு டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக சமீப காலமாக தகவல் வெளியானது. ஆனால் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, கணவரை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.