Skip to main content

நெட்ஃப்லிக்ஸ், அமேசான் அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ் நடத்திய பேச்சுவார்த்தை...

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

பிரபல ஆன்லைன் வீடியோ தளங்களான நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

rss workers meet netflix amazon ott

 

 

திரைப்படங்கள், சீரிஸ்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் இந்த தளங்கள், இந்திய கலாச்சாரத்தை தவறாக சித்தரிப்பதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக மிஸ் மேட்ச், சேக்ரட் கேம்ஸ், மாயா 2, லஸ்ட் ஸ்டோரிஸ், சேக்ரட் கேம்ஸ் உள்ளிட்ட சீரிஸ்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கைகளை விமர்சிப்பதுபோல உள்ளது என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் நெட்ப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசவிரோத மற்றும் இந்துவிரோத கருத்துகளைக் கொண்ட தொடர்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக உண்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான தொடர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

திமுக பிரமுகர் அடித்த காலண்டர்; போலீசில் புகாரளித்த இந்து முன்னணி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Calendar scored by DMK person; Hindu Front reported to police

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்தவர் காயத்ரி இளங்கோ. இவர் 2024 க்கான மாத காலண்டர் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக 2024 ஜனவரி 30 ஆம் தேதி 'ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கு உத்தமர் காந்தி படுகொலை' (1948) என்று அச்சிடப்பட்டிருந்தது.  

'காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக, காழ்ப்புணர்ச்சியுடன் அமைதியை சீர்குலைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக காலண்டர் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறார்' என இந்து முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தேசபக்தி மிக்க நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலும், மக்களிடம் பிளவு ஏற்படுத்தி கலவரம் உருவாக வேண்டும் என்ற தீய எண்ணத்தில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் காயத்ரி இளங்கோ என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.