டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கடந்த 24-ந் தேதி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறை சம்பவங்களில் இதுவரை 35பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் சுமார் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

Religious reconciliation incident in Delhi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

டெல்லியில் நிகழ்ந்தஇந்த வன்முறை சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்த வன்முறை சம்பவத்தில் வீடுகளைஇழந்தஇஸ்லாமிய மக்களுக்கு இந்துக்கள் தங்களதுவீடுகளில் பாதுகாப்பளித்த நெகிழ்ச்சி சம்பவம்நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக வடகிழக்குடெல்லிஅசோக் நகரில்இஸ்லாமிய குடியிருப்புபகுதியில்வன்முறை நிகழ்ந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்அங்குள்ள 40 இஸ்லாமியர் வீடுகளையும், கடைகளையும் எரித்தனர். அதுமட்டுமில்லாமல் மதியம் தொழுகையின் பொழுது மசூதியில்தஞ்சம் புகுந்த 20 க்கும் மேற்பட்டவர்களை தாக்கியதாகவும், மசூதியைசேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் தங்க இடம் இல்லாமல் தவித்தஇஸ்லாமிய மக்களுக்கு அருகில் வசிக்கும்இந்துக்கள் தங்கள் வீடுகளில்தங்கவைத்துபாதுகாப்பளித்துள்ளனர். வன்முறைக்கு இடையே நடந்த இந்த மதநல்லிணக்க சம்பவம்நெகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.